ஆங்கிலத்தில் Down Syndrome என அழைக்கப்படும் இக்குறைபாடு நோய் மரபணு கோளாறூகளில் மிகவும் முக்கியமானதாக காணப்படுகிறது. இது பல்வேறு அளவுகளில், கற்கும் திறனையும் உடலையும் பாதிக்கிறது.
இக்குறைபாடு, பிறக்கப்போகும் தன் குழந்தைக்கு இருப்பதை கருவில் வைத்தே அறிந்து கொண்ட தாயொருவர் கடந்த பெப்ரவரி 9ம் திகதி ஒரு மின்னஞ்சல் எழுதினார்.
'எனக்கு குழந்தை பிறக்கப் போகிறது. ஆனால், அவனுக்கு டாவுன் சிண்ட்ரோம் இருப்பதை அறிந்து கொண்டேன். எனக்கு பயமாக இருக்கிறது. என குழந்தைக்கு என்ன மாதிரியான வாழ்க்கை இருக்கப் போகிறது??" இது தான் அந்த மின் அஞ்சல்.